‘மக்கள் சேவை வெகுசன ஊடகம்’ எனும் கருத்தாக்கத்திற்கு ஊடகத்துறை மாற வேண்டும்!

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (IFJ)வழிகாட்டலின் கீழ், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த ஆய்வொன்றின் அறிக்கையை கடந்த செப்டெம்பர் 05 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

“இலங்கை ஊடகங்கள் – உரிமைகளுக்காக பொறுப்புடன் முன்னோக்கிய நடையில்” – IFJ-UTU 2023 நிகழ்ச்சி: இறுதிச் செயல்பாடு

 IFJ-UTU 2023 நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிச் செயற்பாடு கடந்த நவம்பர் 23 ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் இடம்பெற்றது. “இலங்கை ஊடகங்கள் – உரிமைகளுக்காக பொறுப்புடன் முன்னோக்கிய நடையில்” எனும் தொனிப்பொருளின் கீழ், ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இந்நிகழ்வுடன் இணைந்தவாறு FMETU இனது 9ஆவது தேசிய பிரதிநிதிகள் மாநாடும் (2023.11.23) நடைபெற்றது.

இதற்காக உறுப்பினர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூகிள் படிவம் வழங்கி பதிவு செய்யப்பட்டதோடு, அதற்காக அழைக்கப்பட்ட 125 பேரில் சுமார் 105 பேர் பதிவு செய்திருந்தனர். ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் இந்த மாநாட்டில், இலங்கையில் இன்று ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் தெளிவூட்டல் மற்றும் ஒரு முன்னணி ஊடக அமைப்பாக FMETU ஐ வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இவ்வருட நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள FMETU உறுப்பினர்களின் கூட்டுப் பங்கேற்புடன், 2024/2025 இற்கான ஏற்கனவே திட்டமிடப்பட்ட மூலோபாயத் திட்டம் மற்றும் எதிர்காலச் செயற்பாட்டின் திட்டமிடல் ஆகியன, உறுப்பினர்களிடையே மிக முக்கிய மையப் பொருளாக அமைந்திருந்தது.

“2024-2025 இற்கான சம்மேளனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் IFJ-UTU-2023” என்ற தலைப்பில், இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் தரிந்து உடுவரகெதரவினால் ஆரம்ப விரிவுரை முன்னெடுக்கப்பட்டது. IFJ-UTU-2023 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட “மூலோபாய தலையீட்டுத் திட்டம் 2024-2025” பற்றி அவர் விரிவாக விளக்கியதோடு, இதில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளையும் விளக்கினார். குறித்த விளக்கத்திற்குப் பின்னர் அது பற்றிய நேரடி விவாதத்தில் உறுப்பினர்கள் மிகவும் ஆவலுடன் பங்குபற்றியிருந்தனர். மூலோபாயத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் உறுப்பினர்கள் பங்களித்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட கூகிள் படிவம் மூலம் 100 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் முன்வைத்த கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், 2024ஆம் ஆண்டின் பிரதிநிதிகள் மாநாட்டின் செயற்பாடுகள் முன்னைய தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட இந்திரா நவகமுவவின் தலைமையில் ஆரம்பமானது. கடந்த பிரதிநிதிகள் மாநாட்டின் அறிக்கை தர்மசிறி லங்காபேலியினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்குப் பின்னர், 2024-2025 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான புதிய அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டனர். இங்கு தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் குழு 09 உறுப்பினர்களைக் கொண்டதுடன், நிறைவேற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆகும். முழு நிர்வாகக் குழுவும் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பொருளாளர் றிஸ்வான் சேகு மொஹிதீன் 2021-2022 கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தார், இது சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

2024 மற்றும் 2025 இற்கான FMETU செயற்றிட்டத்தைத் திட்டமிடுதல்!

இலங்கை ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் (FMETU) எதிர்வரும் 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்களுக்கான செயற்றிட்டத்தை திட்டமிட முழு நாள் செயலமர்வவொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, (IFJ-UTU) இனது 2023 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான முன்முயற்சியாகும். நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முக்கியமான முயற்சியில் ஸ் ரீலங்கா ரெயின்போ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியமை மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளர்களான திலீப சமரசிங்க மற்றும் மஹீஷ்கா பெனாண்டோ ஆகியோரால் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் FMETU செயற்குழுவைச் சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்களது அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான தமது சொந்த தீர்வுகளை கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டனர்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான எதிர்காலத் திட்டமிடலை ஒழுங்கமைப்பதற்கான முக்கிய விடயங்கள்

தலைப்பு, உப தலைப்பு மற்றும் நோக்கங்கள்

  1. ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றி கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  2. நலன்புரித் திட்டங்கள், சம்பள முன்மொழிவுகள் மற்றும் தொழில்முறை உரிமைகள்
  3. எமது முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது
  4. வருடாந்தம் ரூ. 1200 உறுப்பினர் சந்தாவை எவ்வாறு தொடர்ச்சியாக செலுத்துவது?
  5. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் (தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், அரச ஊடக நிறுவனங்கள், தேசிய ஊடகவியலாளர் சங்கம்) மற்றும் இளம் ஊடகவியலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள்.
  6. அரச ஊடக நிறுவனங்களில் தொழில்சார் சிக்கல்கள், கூட்டாக பேரம் பேசும் ஒப்பந்தம், பேச்சுவார்த்தை செய்யக்கூடிய திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம், கொடுப்பனவு முறைகளை பெறுவதற்கான உத்திகள்
  7. FMETU உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வலுப்படுத்துதல். ஒவ்வொரு ஊடகவியலாளர்கள்/ நிறுவனங்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதைக் கண்டறிதல்.
  8. FMETU.org இணையதளத்தைப் புதுப்பிக்க/ மேம்படுத்துதல். செய்திமடலை பிரசுரித்தல் தொடர்பில் திட்டமிடல். நியுஸ் புல்லட்டின் வடிவமைத்தல் மற்றும் திட்டமிடல்.
  9. ஊடகவியலாளர்களின் தொழில்முறை பயிற்சி (டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஊடகவியலார்களை மாற்றுதல்) – தொழில்முறை நிலை, தேவையான அறிவு, திட்டமிடல்
  10. சங்கத்திற்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தல்

லசந்த விக்ரமதுங்கவின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை (08) மு.ப. 10.00 மணியளவில் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ். சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,பொது அமைப்புகளின் பிரமுகர்கள்,மதத்தலைவர்களுக்கு அழைக்கு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வாழ்கை வரலாறு அடங்கிய கோர்ப்புக்களை இந்தியாவைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,இயக்குனருமான புகழேந்தி தங்கராசா படமாக உருவாக்கி இன்றையதினம் இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டவுள்ளது.

க. விஜயரெத்தினம்

உங்களிடம் கேள்விகள் உள்ளதா? அழைக்கவும் அல்லது சந்திக்கவும்

+[94] 773 641 1111

# 30,
அமரசேகர மாவத்தை, கொழும்பு 5,
இலங்கை.

info@fmetu.org 

செய்திமடல்

சமீபத்திய செய்தி மற்றும் புதுப்பிப்பைப் பெறுங்கள்

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

© 2021 – FMETU. All rights reserved.

Carefully crafted by Cyber Ceylon